பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள் 2 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பீகாரில் மேற்கொண்ட தீவிர வாக்காளர் திருத்தப் பணியின் போதும், அவர்கள் இருவரின் வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவருக்கும் தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.