ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் குருஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் அணு மின் நிலையத்தில் தீப்பற்றிய நிலையில், உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை உடனடியாக அணைத்தனர்.
இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லையென ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் 34-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய அணு மின் நிலையம் மீதான தாக்குதல் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.