ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் நடைபெறவுள்ள 2ம் உலகப்போரின் வெற்றித் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை 2ம் உலகப்போர் நடைபெற்றது. 6 ஆண்டுகளாக நடைபெற்ற அந்தப் போர், ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இந்த வெற்றித் தினம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலகப்போரின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதற்காக, சீனாவில் மிகப்பெரிய அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெறும் வெற்றிக் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், உலகிற்குத் தனது ராணுவ வலிமை எடுத்துக்காட்டும் வகையில் சீனா இந்த அணிவகுப்பை மேற்கொள்ளவுள்ளது.

அணிவகுப்பில் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும், நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் இந்த அணிவகுப்பில், புதின், கிம் ஜாங் உன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். ஒரே மேடையில், சீன அதிபர், ரஷ்ய அதிபர், வடகொரிய அதிபர்  தோன்றவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தகைய அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர்  கலந்துகொள்கிறார். மேலும் 2 நாட்கள் அங்கு தங்கியிருந்தால், முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்வில் மோடி பங்கேற்க முடியும். ஆனால், மோடி அவ்வாறு செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஜப்பான்.

தொடக்கத்திலேயே கூறியதுபோல ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்ததால்தான் 2ம் உலகப்போரே முடிவுக்கு வந்தது. அந்தக் கொண்டாட்டம்தான் சீனாவில் நடைபெறவுள்ளது. அதில் மோடி கலந்துகொண்டால், ஜப்பானுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும். இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை அது பாதிக்கவும்கூடும்.

இந்தியாவின் நம்பகமான நாடுகள் குறித்து பட்டியலிட்டால், அதில் கட்டாயம் ஜப்பான் இடம்பெறும். ஆனால், சீனா அப்படியல்ல. எப்போது அது எல்லைப் பிரச்னையில் ஈடுபடும், பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை ஆயுதங்களை வழங்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் எப்படியெல்லாம் தடையாக இருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது.

எனவே, சீனாவின் அணிவகுப்பில் கலந்துகொண்டு அந்நாட்டிடம் நட்புகரம் நீட்டுவதைக் காட்டிலும், ஜப்பானுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் இருப்பதே முக்கியம் என்பதை இந்தியா கவனத்தில் கொண்டு செயல்பட்டுள்ளதாக ராஜதந்திரிகள் கூறுகின்றனர்.

Tags: chinajappanசீனாpm modi visit jappanIndia skips Chinese military parade for Japanசீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா2ம் உலகப் போரில் வெற்றி தின அணிவகுப்பு
ShareTweetSendShare
Previous Post

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

Next Post

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies