விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், பருவமழைக் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் தீயணைப்புத் துறைச் சார்பில் நடைபெற்றது.
சக்கரகுளத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஒத்திகை, செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, பருவமழைக் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் நபர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டது.