விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே பணம் தரமறுத்த தந்தையை மகன் கடப்பாறையால் அடித்து கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மலையனூர் அருகே மட்டப்பாறைப் பகுதியில் வசித்த வந்த சாமிக்கண்ணு என்பவரின் 3வது மனைவியின் மகன் அய்யனார் என்பவர் போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதனிடையே, போக்சோ வழக்கு செலவுக்கான 2 லட்சம் ரூபாய் பணத்தைச் சாமிக்கண்ணு தரமறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அய்யனார், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தைச் சாமிக்கண்ணுவை கடப்பாறையால் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சாமிக்கண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அய்யனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.