விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?
Mar 15, 2026, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வழக்கமான எரிபொருட்களுக்கு மாற்றாக ஹைட்ரஜனைக் கொண்டு ரயில்களை இயக்கும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? பார்க்கலாம், இந்தச் செய்தி தொகுப்பில்.

காற்று மாசைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரீன் ஹைட்ரஜன் ரயில்கள் குறித்த சோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்காக, சென்னையில் உள்ள ICF தொழிற்சாலையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இதுதொடர்பாக நடத்தப்படட முதற்கட்ட சோதனை வெற்றிப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள ஜிந்த்-பானிபட் வழித் தடத்தில் ரயிலை முழுமையாக இயக்கி சோதனைச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்களை 360 கிலோ ஹைட்ரஜனைப் பயன்படுத்தி 90 கிலோ மீட்டர்  தூரம் வரை இயக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய ரயில்களால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும், ரயில்களில் 20 முதல் 25 நிமிடங்களில் எரிபொருளை நிரப்பி விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயில்களின் இரண்டு புறங்களிலும் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், 2,600 பேர்  பயணிக்கும் வகையில் 8 வழக்கமான பெட்டிகள் இருக்கும் என விளக்கம் அளித்துள்ளனர்.

கிரீன் ஹைட்ரஜன் திட்டம் குறித்து அண்மையில் விளக்கம் அளித்த ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தலா 80 கோடி செலவில் 35 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

2070ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத பயணத்தை இலக்காகக் கொண்டு இந்திய ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்து பெறப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் உற்பத்தி செலவு குறையும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பார  போன்றவற்றின் வரிசையில், ஹைட்ரஜன் ரயிலும் இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: indian rail wayஹைட்ரஜன் ரயில்What are the features of the hydrogen train coming soon?ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள்கிரீன் ஹைட்ரஜன் ரயில்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

Next Post

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

Related News

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies