ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமெனக் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ். ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்குத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள அரசின் முடிவுக்குப் பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள் இதுவரை பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.