ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சமுத்திர ஆரத்தி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க.,மாநில செயலாளர் அஸ்வத்தாமன், எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் உட்பட இந்துதிருத்தொண்டர் பேரவையினர், துறவிகள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
















