நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர்த் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், குடியரசு துணைத் தலைவராகச் சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவிக்காலம் இனிமையாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுவாழ்வில் சி.பி.ராதாகிருஷ்ணன் கொண்டிருக்கும் அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.