இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகச் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த பிரதமர் மோடியுடன் பேச்சுகள் நடத்த ஆவலுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வர்த்தகத் துறையில் இருநாடுகளுக்கு இடையே கடினமான சூழல்கள் இனி உருவாகாது எனத் தான் நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.