17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் - ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!
Oct 31, 2025, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசாக மாறியதிலிருந்து அரசியல் குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் பெயர் பெற்ற நேபாளத்தில் ஜென் Z இளைஞர்கள் போராட்டம், பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இமயமலை அடிவாரத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு அழகிய நாடு நேபாளம் ஆகும். சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ராணா வம்சத்தை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்காக ஆயுதப் புரட்சி நடந்தது.

ராணாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. 1951ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனநாயகம் மலர்ந்தது. மன்னர்  திரிபுவன் அரியணையில் ஏறினார். இடைக்கால அரசு மற்றும் இடைக்கால அரசியல் அமைப்பை உருவாக்குவதாக அவர் அறிவித்தார்.

1955-ல் துரதிர்ஷ்டமாக மன்னர் இறந்ததால், மகேந்திரா அரியணை ஏறினார். 1959-ல் முடியாட்சியின் கீழ் அதிகாரத்தை ஒருங்கிணைக்கும் “பஞ்சாயத்து” முறையை அறிமுகப்படுத்தினார். முதன்முறையாகப் பொது தேர்தல் நடத்தப்பட்டது.

நேபாளக் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஓராண்டில்,அனைத்து அரசியல் கட்சிகளையும், நாடாளுமன்றத்தையும்,அரசியல் அமைப்பையும் மன்னர் மகேந்திரா தடைச் செய்தார். 1972-ல் மன்னர் மகேந்திரன் மரணத்துக்குப் பிறகு மன்னர்  பிரேந்திரா அரியணை ஏறினார். நேபாளக் காங்கிரஸ் ஜனநாயக ஆட்சிக்கான போராட்டத்தைத் தொடங்கியது.

கட்சிகள் மீதான தடையை நீக்கிய மன்னர் பிரேந்திரா, முடியாட்சியின் கீழ், ஜனநாயக அரசு செயல்படும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். 1991-ல் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் நேபாளக் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. 1996-ல் முடியாட்சிக்கு முடிவு கட்ட மாவோயிஸ்ட் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது.

10 ஆண்டுகாலம் நடந்த ஆயுதக் கிளர்ச்சியில்,17,000க்கும் மேற்பட்டோர்க் கொல்லப்பட்டனர். இந்த ஆயுதப் போராட்டம், கிராமப்புறங்களை எல்லாம் அழித்தது. ஆயிரக்கணக்கானவர்களை இடம்பெயர வைத்தது. மேலும் அரசு நிறுவனங்களையும் நிர்வாகத்தையும் கடுமையாகப் பலவீனப்படுத்தியது.

2001-ல் எதிர்பாராத விதமாக அரசக் குடும்பத்தில், பட்டத்து இளவரசர்த் திபேந்திரா நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஞானேந்திரா தவிர மன்னர்ப் பிரேந்திரா குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.

தற்கொலைக்கு முயன்ற திபேந்திரா சாகவில்லை. ஓராண்டாகக் கோமாவில் இருந்து உயிரிழந்தார். எனவே மன்னர் ஞானேந்திரா நேபாள அரசராக அரியணை ஏறினார். சிறப்பு அவசர நிலை அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாட்டின் மீதான நேரடி கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டார். மூன்று மாதங்களில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக நாட்டின் அவசர நிலையை நீக்கினார்.

2008ம் ஆண்டு மே 28ம் தேதி, 240 ஆண்டுகால முடியாட்சி முடிவுக்கு வந்தது. நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறியது. மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறி, தலைநகரில் நிர்மல் நிவாஸில் சாதாரண குடிமகனாக வாழத் தொடங்கினார். இந்த 17 ஆண்டுகளில் 14 வெவ்வேறு அரசுகளை நேபாளம் கண்டுள்ளது.

எந்த அரசும், முழுமையாக ஐந்து ஆண்டு காலம் பதவியில் நீடிக்கவில்லை. மேலும், இதுவரை ஆறு அரசியல் அமைப்பு சட்டங்கள் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சட்டம் 2015ம் ஆண்டு கொண்டு வரப் பட்டதாகும்.

நேபாள அரசியல் அமைப்பின் படி, நாடாளுமன்றத்தில் உள்ள 275 உறுப்பினர்களில், 165 பேர் நேரடி பொது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் 110 உறுப்பினர்கள் மக்கள் தொடர்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

நேபாள  கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் முதல் மற்றும் இரண்டாவது பெரிய கட்சிகளாக உள்ளன. நேபாளக் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.

அரசியல் ஆதாயத்துக்காகக் கூட்டணியை விருப்பம் போல் மாற்றிக் கொள்ளும் சுயநல அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு அரசின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையைக் குலைத்தது. நீண்டகாலமாக இருந்த கோபம் ஜென் Z இளைஞர்கள் போராட்டத்தால், நேபாள அரசைக் கீழே தள்ளியுள்ளது.

2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நேபாள அரசியலமைப்பு சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது சொந்த விதியைத் தேர்ந்தெடுக்கும் நேபாளத்தின் இறையாண்மை உரிமையை இந்தியா எப்போதும் ஆதரிக்கும் என்றும், இமயமலையைப் போல உயர்ந்து, முழு உலகுக்கும் ஒரு முன்மாதிரியாக நேபாளம் மாறும் என்றும், ஒரு ஜனநாயக மற்றும் வளமான நேபாளத்தையே இந்தியா விரும்புவதாகக் கூறினார்.

நேபாளத்தின் அரசியலமைப்பு சபையில் உரையாற்ற அழைக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் ஒரே வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nepal is reeling from political instability after 14 governments in 17 yearsதத்தளிக்கும் நேபாளம்nepal news today
ShareTweetSendShare
Previous Post

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

Next Post

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

Related News

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

Load More

அண்மைச் செய்திகள்

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies