வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!
Mar 15, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

Murugesan M by Murugesan M
Sep 10, 2025, 08:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் அந்நாட்டு அதிபர் மேக்ரானுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது. வாகனங்களுக்குத் தீ வைப்பு, கண்ணீர்  புகை குண்டு வீச்சு என, வன்முறையால் அந்நாடே ஸ்தம்பித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

.அழகான நிலப்பரப்புகள், புகழ்பெற்ற நகரங்கள், உலக அதிசயம் என எண்ணிலடங்கா பெருமைகளை  தன்னகத்தே கொண்டது பிரான்ஸ். கலை, கலாச்சாரம், உணவு உள்ளிட்ட தனித்துவமான அடையாளங்களுடன், இலக்கியத்தின் மையமாகவும், உலகின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் திகழும் பிரான்ஸ், தற்போது இரண்டு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.

பிரான்ஸில் அரசியல் கொந்தளிப்பு நிலவும் அதே வேளையில், பொதுமக்களின் நாடு தழுவிய போராட்டம் அதிபர் மேக்ரோனுக்குப் புதிய சவாலாக மாறியுள்ளது. பிரதமராக இருந்த பிரான்சுவா பேய்ரூ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் பல தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்தது.

இதனால் பட்ஜெட்டை நிறைவேற்ற நாடாளுமன்ற ஆதரவைப் பெற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்  பேய்ரூ. அதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேய்ரூ தோல்வியடைந்தாா்.

இதனால் பிரதமராகப் பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது. மீண்டும் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்கவும், நெருக்கடியைச் சமாளிக்கவும் அதிபர் மேக்ரான், புதிய பிரதமராகச் செபாஸ்டியன் லெகோா்னுவை நியமித்தாா்.

பிரான்ஸின் 39 வயதேயான இளம் ராணுவ அமைச்சரான செபாஸ்டியன் லெகோா்னு, அதிபர் இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளர். 2017 முதல் மேக்ரானின் ஒவ்வொரு அரசாங்கத்திலும் பணியாற்றியுள்ள அவர், 2 ஆண்டுகளுக்குள் பிரான்ஸின் 5ஆவது புதிய பிரதமராகத் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அதிபர் மேக்ரானின் இந்த முடிவு எதிர்க்கட்சிகள் மத்தியில், குறிப்பாக இடதுசாரிகளிடையே கோபத்தைத் தூண்டியது. மேலும், அரசின் பட்ஜெட் சார்ந்த சிக்கன நடவடிக்கையும், அதிபரின் அரசியல் செயல்பாடுகளும் மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இதனால் அனைத்தையும் முடக்குவோம் என்ற கருப்பொருளுடன் சமூக ஊடகங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி புதன் கிழமை, பல நகரங்களில் சாலைகளில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களுக்குத் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரீஸில் கலவரத் தடுப்புப் பிரிவு போலீசார், கண்ணீர்  புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அரசுக்கு எதிரான வன்முறையில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டன.

பிரான்ஸ் முழுவதும் 80 ஆயிரம் போலீசார்  குவிக்கப்பட்டு கூட்டத்தைக் கலைத்தனர். தலைநகரில் மட்டும் குறைந்தது 132 பேர்  கைது செய்யப்பட்டதாகவும், நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இவ்வாறு போராட்டம் நடப்பது இது முதல்முறை அல்ல. மேக்ரானின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அங்கு வெடித்த போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 2022- இல் பென்ஷன் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு மற்றும் இளைஞர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் பிரான்ஸில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல், அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது.

Tags: அதிபர் மேக்ரான்Riots in Francesetting vehicles on firethrowing tear gasa new challenge for President Macronபிரான்ஸில் அரசியல் கொந்தளிப்பு
ShareTweetSendShare
Previous Post

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Next Post

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies