வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!
Oct 31, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

Web Desk by Web Desk
Sep 10, 2025, 08:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் அந்நாட்டு அதிபர் மேக்ரானுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது. வாகனங்களுக்குத் தீ வைப்பு, கண்ணீர்  புகை குண்டு வீச்சு என, வன்முறையால் அந்நாடே ஸ்தம்பித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.

.அழகான நிலப்பரப்புகள், புகழ்பெற்ற நகரங்கள், உலக அதிசயம் என எண்ணிலடங்கா பெருமைகளை  தன்னகத்தே கொண்டது பிரான்ஸ். கலை, கலாச்சாரம், உணவு உள்ளிட்ட தனித்துவமான அடையாளங்களுடன், இலக்கியத்தின் மையமாகவும், உலகின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் திகழும் பிரான்ஸ், தற்போது இரண்டு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.

பிரான்ஸில் அரசியல் கொந்தளிப்பு நிலவும் அதே வேளையில், பொதுமக்களின் நாடு தழுவிய போராட்டம் அதிபர் மேக்ரோனுக்குப் புதிய சவாலாக மாறியுள்ளது. பிரதமராக இருந்த பிரான்சுவா பேய்ரூ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் பல தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்தது.

இதனால் பட்ஜெட்டை நிறைவேற்ற நாடாளுமன்ற ஆதரவைப் பெற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்  பேய்ரூ. அதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேய்ரூ தோல்வியடைந்தாா்.

இதனால் பிரதமராகப் பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது. மீண்டும் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்கவும், நெருக்கடியைச் சமாளிக்கவும் அதிபர் மேக்ரான், புதிய பிரதமராகச் செபாஸ்டியன் லெகோா்னுவை நியமித்தாா்.

பிரான்ஸின் 39 வயதேயான இளம் ராணுவ அமைச்சரான செபாஸ்டியன் லெகோா்னு, அதிபர் இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளர். 2017 முதல் மேக்ரானின் ஒவ்வொரு அரசாங்கத்திலும் பணியாற்றியுள்ள அவர், 2 ஆண்டுகளுக்குள் பிரான்ஸின் 5ஆவது புதிய பிரதமராகத் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அதிபர் மேக்ரானின் இந்த முடிவு எதிர்க்கட்சிகள் மத்தியில், குறிப்பாக இடதுசாரிகளிடையே கோபத்தைத் தூண்டியது. மேலும், அரசின் பட்ஜெட் சார்ந்த சிக்கன நடவடிக்கையும், அதிபரின் அரசியல் செயல்பாடுகளும் மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

இதனால் அனைத்தையும் முடக்குவோம் என்ற கருப்பொருளுடன் சமூக ஊடகங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி புதன் கிழமை, பல நகரங்களில் சாலைகளில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களுக்குத் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரீஸில் கலவரத் தடுப்புப் பிரிவு போலீசார், கண்ணீர்  புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அரசுக்கு எதிரான வன்முறையில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டன.

பிரான்ஸ் முழுவதும் 80 ஆயிரம் போலீசார்  குவிக்கப்பட்டு கூட்டத்தைக் கலைத்தனர். தலைநகரில் மட்டும் குறைந்தது 132 பேர்  கைது செய்யப்பட்டதாகவும், நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இவ்வாறு போராட்டம் நடப்பது இது முதல்முறை அல்ல. மேக்ரானின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அங்கு வெடித்த போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 2022- இல் பென்ஷன் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு மற்றும் இளைஞர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் பிரான்ஸில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல், அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது.

Tags: அதிபர் மேக்ரான்Riots in Francesetting vehicles on firethrowing tear gasa new challenge for President Macronபிரான்ஸில் அரசியல் கொந்தளிப்பு
ShareTweetSendShare
Previous Post

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Next Post

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

Related News

புது நம்பிக்கையை ஏற்படுத்திய டிரம்பின் அறிவிப்பு : வர்த்தக ஒப்பந்தத்தை எச்சரிக்கையுடன் அணுக இந்தியா திட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

ஈரானின் ‘சபஹார்’ துறைமுக தடை விலக்கை நீட்டித்த அமெரிக்கா : இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies