இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!
Jan 14, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம், இந்திய ஐடி துறையைக் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது என்ன சட்டம்? அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்?. பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

இந்தியாவில் ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. “அங்களுக்கு என்னப்பா, கை நெறைய சம்பளம், வாரத்துக்கு ரெண்டு நாள் லீவ், வருஷாவருஷம் இன்கிரிமெண்ட், ப்ரமோஷன்…. நாம அப்டியா?” என ஐடி துறையினரைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை.

ஆனால், ஐ.டி. துறையினரின் இந்த மவுசும், அவர்கள் மீதான இந்த வியப்பும் தொடர்ந்து நீடிக்குமா என்பது இனி சந்தேகம்தான். ஏனென்றால், இந்திய ஐடி துறையினரின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையிலான புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.

அந்தச் சட்டத்தின் பெயர் HIRE act. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து ஐடி சேவையைப் பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்படவுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகப் பிரிவு ஆலோசகரான பீட்டர் நவாரோ என்பவர்தான், இந்தச் சட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதாகக் கூறப்படுகிறது. அவுட்சோர்சிங் முறையில் பெறப்படும் ஐடி சேவைகளுக்கும் வரி விதிக்க வேண்டும் என்ற முத்தான யோசனையை அவர் ட்ரம்பிடம் வழங்கியிருக்கிறார்.

தற்போது அமெரிக்கச் செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சட்டமாக்க ட்ரம்ப் அரசு முயன்று வருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், எந்தெந்த அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து அவுட்சோர்சிங் முறையில் ஐடி சேவையைப் பெறுகின்றனவோ, அவையெல்லாம் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டி வரும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் முதல் ஆளாகப் பாதிக்கப்பட போவது, இந்தியாவைச் சேர்ந்த ஐடி நிறுவனங்கள்தான். ஏனெனில், இந்திய ஐடி நிறுவனங்களின் அவுட்சோர்சிங் வருமானத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்காவில் இருந்துதான் பெறப்படுகிறது.

அதிக வரி செலுத்தி வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் பெறுவதைக் காட்டிலும், சொந்த நாட்டு ஊழியர்களைக் கொண்டே வேலையைச் செய்து முடிக்கதான் இனி அமெரிக்க நிறுவனங்கள் விரும்பும். அதனால், இந்திய ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், அமெரிக்க நிறுவனங்களுக்குக் குறைந்த கட்டணத்திற்கு இந்திய ஊழியர்கள் சேவை வழங்க வேண்டும். அல்லது ஐடி சார்ந்த பணிகளுக்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் மற்ற நாடுகளிடம் இருந்தும் அவுட்சோர்சிங் பெற வேண்டும் என நிபுணர்கள் ஆலோசனைத் தெரிவிக்கின்றனர்.

Tags: americausadoanald trumpDanger awaiting the Indian IT sector: Trump government is bringing a new law!
ShareTweetSendShare
Previous Post

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

Next Post

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies