நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தால் அதிபர், பிரதமர் பதவி விலகியதால், இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
தொடர்ந்து அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனப் பொறுப்பு அதிபர் ராம் சந்திரப் பவுடலின் பத்திரிக்கை ஆலோசகர் கிரண் போகரேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.