விதவிதமாய்.. வித்தியாசமாய்... : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வினோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதில் வடகொரிய அதிபருக்கு ஈடுஇணையே இல்லை. தற்போது அவர் விதித்துள்ள தடை ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..

வடகொரியா உலகின் மிகவும் விசித்திரமான நாடு. அங்கே என்ன நடக்கிறது? மக்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்? அதிபர்  கிம் ஜாங் உன் எவ்வாறு ஆட்சி நடத்துகிறார்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. மிகவும் மர்மமான நாடாகவே பல தசாப்தங்களான வடகொரியா இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், வடகொரியா குறித்த 14 பக்க அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன்னின் ஆட்சியின்கீழ் இனி ஒரு நொடி கூட வசிக்க முடியாது என முடிவெடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர்
உயிரைப் பணயம் வைத்து வடகொரியாவில் இருந்து வெளியேறினர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை  கொண்டு இந்த அறிக்கை  தயார் செய்யப்பட்டுள்ளது.

வடகொரியாவில் எத்தகைய சட்டங்கள், கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறித்து ஐநாவின் இந்த அறிக்கை விளக்குகிறது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுப்பாடு பலரரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டுத் தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்க கூடாது. அதிலும் குறிப்பாக, தென்கொரிய தொடர்களின் பக்கம் தலைவைத்தே படுக்கக் கூடாது எனக் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை மீறினால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என அவர்  தெரிவித்துள்ளார்.

இம்சை அரசன் படத்தில், “புறாவுக்கு எல்லாம் போரா” என ஒரு வசனம் வரும். அதேபோன்ற கேள்வியைதான் உலக மக்கள் தற்போது எழுப்பி வருகின்றனர், “தொலைக்காட்சி தொடர்களைப் பார்ப்பதற்கெல்லாம் மரண தண்டனையா?”..

ஆனால், இத்தகைய வினோதத் தடைகளை கிம் ஜாங் உன் விதிப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை அவர் விதித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ஆண்களுக்கு எவ்வாறு ஹேர்கட் செய்வது, எந்த ஹேர்ஸ்டைல் வைப்பது என்பதில் எப்போதுமே ஒரு குழப்பம் இருந்து வரும். ஆனால், வடகொரிய ஆண்களுக்கு அத்தகைய குழப்பமே கிடையாது.

எப்படி ஹேர்கட் செய்ய வேண்டும் என்பதை அரசே கூறிவிடும். மேலும், இந்தந்த ஹேர் ஸ்டைல்களைதான் வைக்க வேண்டும் என்பதற்கான ஒரு பட்டியலையும் வடகொரிய அரசு கைவசம் வைத்துள்ளது. ஆண்களும், பெண்களும் அதில் ஒன்றை  தேர்வு செய்து ஹேர்கட் செய்துகொள்ளலாம்.

அதேபோல, பெண்கள் அடர்  சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் போடுவதற்கும் கிம் ஜாங் உன் “நோ” சொல்லியுள்ளார். வடகொரியா என்பது கம்யூனிச நாடு. கம்யூனிசத்தின் வண்ணம் சிவப்பு.

அப்படிப் பார்த்தால், பெண்கள் தாராளமாகச் சிவப்பு நிற லிப் ஸ்டிக்கை போட்டுக்கொள்ளாம்தானே எனக் கேட்கலாம். ஆனால், சிவப்பு நிறத்தை முதலாளித்துவத்தின் நிறமாகவும் வடகொரிய அதிபர்  கருதுகிறார்.

உடை விஷயத்திலும் கிம் ஜாங் உன் மிகவும் கண்டிப்பானவர். மேற்கத்திய ஆடைகளை வடகொரிய மக்கள் அணிய கூடாது. அதிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்து நினைத்துப் பார்க்கவே கூடாது. சரி, சுற்றுலாப் பயணிகளாவது ஜீன்ஸ் பேண்ட் அணிய முடியுமா எனக் கேட்டால், “வாய்ப்பில்ல ராஜா“ என்பதுதான் வடகொரிய அதிகாரிகள் சொல்லும் பதில்.

இப்படி விதவிதமாய், வித்தியாசமாய் பல விஷயங்கள் வடகொரியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளன. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்டவற்றையும், அந்தத் தடை செய்யப்பட்ட பட்டியலில் கிம் ஜாங் உன் இணைத்துள்ளார் என்பதுதான் கூடுதல் சிறப்பு.

Tags: வடகொரியாஅதிபர் கிம் ஜாங் உன்Differently.. Differently..: North Korea's strange restrictionsவடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்அதிபர்  கிம் ஜாங் உன் ஆட்சி
ShareTweetSendShare
Previous Post

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

Next Post

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies