பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE - இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!
Nov 3, 2025, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக் குலுக்க மறுத்தது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

ஆகிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்ட நாள் முதலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 14-ம் தேதி பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட, பெரும் எதிர்பார்ப்புடன் டிக்கெட் ஓப்பனிங்கிற்காக ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்.

ஏணி வைத்தாலும் இந்திய அணியைத் தொட்டு கூட பார்க்க முடியாது என்ற நிலையில் பாகிஸ்தான் அணி இருப்பதை ரசிகர்கள் அறிந்திருந்தாலும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இரு அணிகளும் மோதும் போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கிளம்பியது.

ஆனால், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதை இந்தியா விரும்புமா என்றெல்லாம் கேள்வி எழ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ சரியான விளக்கத்தை அளித்தது. பாகிஸ்தான் அணியுடனான இருதரப்பு தொடர்களில் இந்தியா ஒருபோதும் விளையாடாது. ஆனால், ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளதால் ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா, ஈவு இரக்கமின்றி அந்த அணியைப் பந்தாடியது. கேப்டன் சூர்யக் குமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள், பஹல்காம் தாக்குதலில் உயரிழந்தவர்களை மனதில் வைத்து ஆக்ரோஷத்துடன் விளையாட, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்குப் பாகிஸ்தான் அணி சுருண்டது. சொற்ப இலக்கை 15 புள்ளி 5 ஓவர்களிலேயே இந்திய அணி எட்டிவிட, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியைப் பழிதீர்த்ததோடு மட்டும் இந்திய வீரர்கள் விட்டுவிடவில்லை. போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நடைமுறையாக இருந்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்களுடன் HAND SHAKE செய்ய மறுத்து தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர். பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதால் தானே அப்பாவி மக்களை இழந்தோம் என்ற கோபக்கனல் இந்திய வீரர்களின் கண்களில் அப்படியே தெரிந்தது.

இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேள்வி எழுப்ப, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தே அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை பொருட்டாகவே கருதக் கூடாது என்ற இந்திய அணியின் செயலுக்குப் பாராட்டுகள் குவிய, அந்த எண்ணத்திற்கு வித்திட்டவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்  தான் அப்படியொரு யோசனையை வீரர்களுக்குக் கொடுத்தாராம். களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தைளால் சீண்டினாலும், அதனைத் துட்சமாக நினைத்து விலகுவதே அவர்களுக்கு வழங்கப்படும் சரியான பதிலடி எனக் கௌதம் காம்பீர்  தெரிவித்தாராம்.

இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களின் காதுக்கு எட்டிவிட ஜென்டில்மேன் விளையாட்டை வைத்தே பாகிஸ்தானுக்குக் குட்டு வைத்த ஜென்டில்மேன் கவுதம் கம்பீர் எனப் புகழ்ந்து வருகின்றனர்.

Tags: பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKEகௌதம் கம்பீர்india vs pakistancricket matchNO HAND SHAKE with Pakistan - Gautam Gambhir gave the idea to Indian players
ShareTweetSendShare
Previous Post

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

Next Post

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Related News

இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

Load More

அண்மைச் செய்திகள்

ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!

கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் – தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies