பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE - இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக் குலுக்க மறுத்தது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

ஆகிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்ட நாள் முதலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 14-ம் தேதி பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட, பெரும் எதிர்பார்ப்புடன் டிக்கெட் ஓப்பனிங்கிற்காக ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்.

ஏணி வைத்தாலும் இந்திய அணியைத் தொட்டு கூட பார்க்க முடியாது என்ற நிலையில் பாகிஸ்தான் அணி இருப்பதை ரசிகர்கள் அறிந்திருந்தாலும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இரு அணிகளும் மோதும் போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கிளம்பியது.

ஆனால், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதை இந்தியா விரும்புமா என்றெல்லாம் கேள்வி எழ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ சரியான விளக்கத்தை அளித்தது. பாகிஸ்தான் அணியுடனான இருதரப்பு தொடர்களில் இந்தியா ஒருபோதும் விளையாடாது. ஆனால், ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளதால் ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா, ஈவு இரக்கமின்றி அந்த அணியைப் பந்தாடியது. கேப்டன் சூர்யக் குமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள், பஹல்காம் தாக்குதலில் உயரிழந்தவர்களை மனதில் வைத்து ஆக்ரோஷத்துடன் விளையாட, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்குப் பாகிஸ்தான் அணி சுருண்டது. சொற்ப இலக்கை 15 புள்ளி 5 ஓவர்களிலேயே இந்திய அணி எட்டிவிட, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியைப் பழிதீர்த்ததோடு மட்டும் இந்திய வீரர்கள் விட்டுவிடவில்லை. போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நடைமுறையாக இருந்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்களுடன் HAND SHAKE செய்ய மறுத்து தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர். பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதால் தானே அப்பாவி மக்களை இழந்தோம் என்ற கோபக்கனல் இந்திய வீரர்களின் கண்களில் அப்படியே தெரிந்தது.

இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேள்வி எழுப்ப, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தே அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை பொருட்டாகவே கருதக் கூடாது என்ற இந்திய அணியின் செயலுக்குப் பாராட்டுகள் குவிய, அந்த எண்ணத்திற்கு வித்திட்டவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்  தான் அப்படியொரு யோசனையை வீரர்களுக்குக் கொடுத்தாராம். களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தைளால் சீண்டினாலும், அதனைத் துட்சமாக நினைத்து விலகுவதே அவர்களுக்கு வழங்கப்படும் சரியான பதிலடி எனக் கௌதம் காம்பீர்  தெரிவித்தாராம்.

இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களின் காதுக்கு எட்டிவிட ஜென்டில்மேன் விளையாட்டை வைத்தே பாகிஸ்தானுக்குக் குட்டு வைத்த ஜென்டில்மேன் கவுதம் கம்பீர் எனப் புகழ்ந்து வருகின்றனர்.

Tags: பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKEகௌதம் கம்பீர்india vs pakistancricket matchNO HAND SHAKE with Pakistan - Gautam Gambhir gave the idea to Indian players
ShareTweetSendShare
Previous Post

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

Next Post

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies