கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பந்தல் அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டமஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளரான மாதேஷ், சித்தப்பன் ஏரி அருகே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாதேஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
















