சென்னை எண்ணூரில் படகுகள் மூலமாகக் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் விக்கிரகங்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்து மகா சபா டிரஸ்ட் சார்பில் 14-ம் ஆண்டாகத் திருப்பதி குடைகள் அனுப்பப்படவுள்ளன.
இதனையொட்டி பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளைப் போற்றும்விதமாக, எண்ணூர் கடலில் படகுகள் மூலம் பெருமாள் விக்கிரகங்கள் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இதனைக் கடற்கரையில் கூடியிருந்த மீனவ மக்கள் உள்ளிட்டோர் கண்டு தரிசித்தனர்.