கொல்கத்தாவில் பெய்துவரும் கனமழைக் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர்த் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், மெட்ரோ ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதிகளான கலிகாபூர், நேதாஜி நகர், இக்பால்பூர், பெஹாலா உள்ளிட்ட இடங்களில் கனமழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் பல இடங்களில் நவராத்திரி விழா களைகட்டி உள்ள நிலையில் தற்போது பெய்யும் கனமழையால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.