பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச எரிவாயு இணைப்புகளை வழங்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்த புதிய இலவச எரிவாயு இணைப்புகளின் மூலம் மேலும் பல லட்சோப லட்ச மகளிரின் உடல்நலம் காக்கப்பட்டு அவர்களின் நேரமும் மிச்சப்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வும் முன்னேறும் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். .
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இத்தகைய ஒரு சிறந்த தீபாவளிப் பரிசை தேச மக்களுக்கு நல்கியுள்ள மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.