ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட முதல் நாளிலேயே 30 ஆயிரம் கார்களை மாருதி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.
மத்திய அரசு ஜி.எஸ்.டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளதால், கார்கள், பைக், வீட்டு உபயோகப்பொருட்கள், உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் சரிந்துள்ளன. குறிப்பாக, வாகனங்களின் விலை, கணிசமாகக் குறைந்துள்ளது.
ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும், தங்கள் விலைக்குறைப்பு பட்டியலை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
நவராத்திரி முதல் நாளான நேற்று, மாருதி நிறுவனம் 30 ஆயிரம் கார்களை டெலிவரி செய்துள்ளது.
இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் 11 ஆயிரம் கார்களையும், டாடா மோட்டார்ஸ் 10 ஆயிரம் கார்களையும் விற்பனை செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.