குப்பை நகரமாகும் "ஐடி ஹப் சிட்டி" : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்
Nov 11, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

Web Desk by Web Desk
Sep 25, 2025, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முக்கிய நகரமான பெங்களூருவில் நிலவும் சுகாதார சீர்கேடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பெங்களூரு நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு எதிராகப் பலரும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இந்தியாவின் IT HUB, இந்தியாவின் சிலிக்கான் வேலி என பல பெயர்களில் அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. தொழில்நுட்பத்துறையில் அதிவேக வளர்ச்சியை கொண்டுள்ள அந்நகரம், பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆடம்பரம்பான கட்டடங்கள், மிகப்பெரிய மால்கள், மெட்ரோ ரயில் சேவை, மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் இணைந்து, பெங்களூருவை வளர்ந்த நாடுகளில் உள்ள நகரங்களுக்கு இணையாக மாற்றி வருகின்றன.

மறுபுறம், மிகவும் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரகமாகவும் பெங்களூரு உள்ளது. சாலைகளும் மோசமாக உள்ளதாகவும், முக்கியமான இடங்கள் குப்பைகளால் சூழப்பட்டுள்ளதாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை அந்நகரம் எதிர்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, Biocon நிறுவனத்தின் நிறுவனர் Kiran Mazumdar-Shaw வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பொதுமக்களின் அக்கறையற்ற தன்மையாலும், நகர நிர்வாகத்தின் திறமையின்மையாலும் பெங்களூரு அசுத்தமான நகரமாக மாறி வருவதாக Kiran Mazumdar-Shaw குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்கள் பொதுஇடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, தூய்மையை கடைபிடிக்க உதவ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குப்பைகளை அகற்ற தூய்மைப்பணியாளர்களுக்கு உரிய உபகரணங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள Kiran Mazumdar-Shaw, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Kiran Mazumdar-Shaw-ன் இந்த எக்ஸ் பதிவை தொடர்ந்து பெங்ளூருவில் நிலவும் அசுத்தமான சூழலை தற்போது பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். எந்தெந்த பகுதிகள் மோசமான நிலையில் உள்ளன என்பதையும் அவர்கள் பட்டியலிட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையம் முதல் கதிரேனஹள்ளி வரையிலான பனசங்கரி பகுதி சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதாகப் பயனர் ஒருவர் தெரிவிக்க, சாக்கடைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை என மற்றொருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருகட்டத்தில் நெட்டிசன்களின் குற்றச்சாட்டுகள் மாநில அரசை நோக்கி நகர்ந்தன. சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என கூறும் நெட்டிசன்கள், கழிவு மேலாண்மை முறை முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் அதிக வரி வசூலிக்கும் நகரை, அதன் அதிகாரிகள் அலட்சியாகக் கையாண்டு வருவதாகவும், Outer Ring Road போன்ற முக்கிய பகுதிகளில்கூட நடைபாதைகள் முறையாக இல்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்தச் சூழலில், பெங்களூருவின் சாலைகள் மோசமாக உள்ளது குறித்து உள்நோக்கத்துடன் கருத்து பகிரப்படுவதாகவும், டெல்லியின் முக்கிய சாலைகளே மோசமாகத்தான் உள்ளதாகவும், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் அந்த அலட்சியமான பேச்சையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர்.

Tags: Bengaluru"IT Hub City" turns into a garbage city: Bengaluru residents unhappy with state governmentகுப்பை நகரமாகும் "ஐடி ஹப் சிட்டி"பெங்ளூருபெங்ளூருவாசிகள்
ShareTweetSendShare
Previous Post

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

Next Post

மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா : எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாத “ராமா” ட்ரோன் ரெடி!

Related News

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – அதிபர் டிரம்ப்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!

உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் – நடிகை கவுரி கிஷன்

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

அரியலூர் : லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

கார் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை – புல்வாமா சேர்ந்தவருக்கு கார் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய இடத்தில் அமித் ஷா ஆய்வு – விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக பேட்டி!

டெல்லி செங்கோட்டை அருகே வெடித்து சிதறிய கார் – 10 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies