மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா : எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாத "ராமா" ட்ரோன் ரெடி!
Jul 24, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா : எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாத “ராமா” ட்ரோன் ரெடி!

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரோன் மற்றும் எதிர்ப்பு-ட்ரோன் அமைப்புகளைச் சோதனை செய்வதற்காக, வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ‘Cold Start’ என்ற பெயரில் மிகப் பெரிய ராணுவப் பயிற்சியை இந்தியா நடத்த உள்ளது. வளர்ந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியப் படைகளின் தயார்நிலையை இந்தப் பயிற்சி மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில், வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள்- நவீன போரின் எதிர்காலம் என்ற மாநாடு நடைபெற்றது. இதில், மூத்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தலைவர் ஏர் மார்ஷல் அஸ்தோஷ் தீட்சித், ‘Make in India’ போலவே, ‘Think in India’ எனப் பாரதச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாகிஸ்தான், ராணுவ ட்ரோன் திறன்களை வளர்க்க முயற்சி செய்துவருகிறது என்றும், அந்நாட்டுக்கு ஒரு படி மேலே இந்தியா முன்னேறி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஜர்பைஜான்-ஆர்மீனியா, ரஷ்யா-உக்ரைன் போர் களத்தில், 70 சதவீத போர் ட்ரோன்களால் நடைபெற்றதாகவும், குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் விலையுயர்ந்த போர் விமானங்கள் மற்றும் ராணுவ தளங்களையும் அழித்துத் தரைமட்டமாக்குவதைப் பார்க்க முடிகிறது என்றும் அஸ்தோஷ் தீட்சித் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஏவிய ஏராளமான ட்ரோன்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் நாட்டின் பாதுகாப்பு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்-ட்ரோன் மற்றும் GPS-ஜாமிங் அமைப்புகள் ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன என்று பாராட்டிய ஏர் மார்ஷல் அஸ்தோஷ் தீட்சித், எதிர்-ட்ரோன் மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா இன்னும் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எதிர்காலப் போர்கள் பெரும்பாலும் ட்ரோன்கள் மற்றும் எதிர்-ட்ரோன் தொழில்நுட்பங்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கும் என்று கூறிய அவர், எதிர்ப்பு -ட்ரோன் அமைப்புகளின் செயல்திறன் மூன்று முக்கிய திறன்களைப் பெற்றிருக்கும் என்றும் விவரித்தார்.

எதிரி ட்ரோன்களை துல்லியமாக அடையாளம் காணுதல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விரைவான மற்றும் துல்லியமான எதிர் தாக்குதல் செய்தல் ஆகிய மூன்று திறங்களைக் கொண்ட 10,000 க்கும் மேற்பட்ட இராணுவப் பயன்பாட்டு ட்ரோன்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் தெளிவுத்திறன் கொண்ட ரேடார் மற்றும் அகச்சிவப்பு கண்டறிதலைத் தவிர்க்கக்கூடிய உலகின் முதல் கண்ணுக்குப் புலனாகாத இரட்டைத்திறன் கொண்ட ட்ரோனான ‘ராமா’வை இந்தியா உருவாக்கி வருகிறது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனை 100 சதவீதம் எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதே இதன் சிறப்பம்சமாகும். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே இதுபோன்ற ஸ்டெல்த் ட்ரோன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்த மிஷன் சுதர்ஷன் சக்ரா திட்டம், அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாயாக இருக்கும் என்று தெரிவித்த ஏர் மார்ஷல் அஸ்தோஷ் தீட்சித், இதில், ட்ரோன் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அமைப்புக்களின் ஒருங்கிணைந்த வான்பாதுகாப்பாகச் சுதர்ஸன் சக்ரா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, ‘சுதர்சன் சக்ரா’ இந்தியாவின் பாதுகாப்பு கேடயமாகவும் வாளாகவும் இருக்கும் என்று பாதுகாப்புப் படை தலைவர் அனில் சவுகான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எவ்வளவு விரைவாக எவ்வளவு துல்லியமாக முப்படைகளை ஒருங்கிணைத்துப் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்த முடியும் என்பதை சோதித்து பார்க்கவே ‘Cold Start’ ராணுவப் பயிற்சியை இந்தியா மேற்கொள்ள உள்ளது.

Tags: ராமா" ட்ரோன் ரெடிindian armyIndia is preparing for a major military exercise: The "Rama" dronewhich cannot be detected by any radaris readyராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா
ShareTweetSendShare
Previous Post

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

Next Post

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

Related News

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

ஜந்தர் மந்தரில் குழப்பம்; சீக்கியர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இடையே கைகலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies