குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!
Jul 28, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குழந்தைகளுக்கு புதிய கதை சொல்லும் பாகிஸ்தான் : ஆபரேஷன் சிந்தூரில் வென்றதாக பொய் கூறும் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் தோற்றதை உலக நாடுகள் அனைத்துமே அறியும். இருந்தபோதும், தான்தான் போரில் வெற்றிப்பெற்றதாக, தனது நாட்டு குழந்தைகளிடம் பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. அதற்கேற்ப பாடபுத்தகத்தில் வரலாற்றை திருத்தியும் எழுதியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலும், அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையும் பாகிஸ்தானுக்கு உலகரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. ஆப்ரேசன் சிந்தூரின்போது நாம் எத்தகைய இழப்பையும், அவமானத்தையும், தலைகுனிவையும் சந்தித்தோம் என்ற உண்மை, கடுகளவுகூட அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரிந்துவிட கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு மிகவும் கவனமாக உள்ளது.

அதன்படி, பாடபுத்தகங்களில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த வெறொரு வெர்ஷனை பாகிஸ்தான் அரசு பதிப்பித்துள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் தற்போது பார்க்கலாம். மே 7ம் தேதி பொய்யான காரணங்களை கூறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பாகிஸ்தான் மக்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும் பாடபுத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தக்க ஆதாரங்களுடன் மறுத்தபோதிலும் இந்தியா தாக்குதலை நிறுத்தவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, பாகிஸ்தான் ராணுவம் மிகுந்த தைரியத்துடன் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தியாவின் ராணுவ நிலைகளை அழித்தொழித்ததாகவும் பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா தனது ரஃபேல் விமானங்கள் குறித்து மிகவும் பெருமை கொண்டிருந்தது. ஆனால், அத்தகைய ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தி அசத்தியதாகவும் பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 26 இடங்களை பாகிஸ்தான் குறிவைத்ததாகவும், அதில் பல இடங்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் குழந்தைகளுக்குக் கதை சொல்லி வருகிறது பாகிஸ்தான்.

ஒரு கட்டத்தில் இந்தியா அதிக இழப்புகளை சந்திக்கவே, அமைதியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகப் பாடபுத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையே ஏற்று பாகிஸ்தான் பெரிய மனது வைத்துப் போரை நிறுத்தியதாகவும், சிறப்பான ராணுவ செயல்பாட்டிற்காக ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தெய்வ திருமகள் படத்தில் தனது குழந்தையை தூங்க வைப்பதற்காக தந்தை விக்ரம் பல்வேறு கதைகளை கூறுவார். நான் அதை செய்தேன், நான் இதை செய்தேன் என அடித்து விடுவார். அத்தகைய ஒரு கதையைதான், பாகிஸ்தான் அரசும் தனது நாட்டு குழந்தைகளிடம் கூறி வருகிறது. இனி ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வரும் அறிவற்றவர்களுக்கு நாம் எப்படி இருந்தோம் என்பது தெரியவா போகிறது என்பதுதான், பாகிஸ்தானின் வாதம்.

Tags: கதை சொல்லும் பாகிஸ்தான்ஆப்ரேஷன் சிந்தூரில் வென்றதாக பாக். தம்பட்டம்pakistan school booksindian armyஆபரேஷன் சிந்தூர்pakistan news todayPakistan tells a new story to children: Pakistan boasts of victory in Operation Sindoor
ShareTweetSendShare
Previous Post

மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு தயாராகும் இந்தியா : எந்த ரேடாராலும் கண்டுபிடிக்க முடியாத “ராமா” ட்ரோன் ரெடி!

Next Post

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies