கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், பட்டா மாறுதலுக்காக விஏஓ கோமதியை அணுகியுள்ளார்.
அதற்கு அவர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுரைப்படி தங்கராஜ், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஏஓ கோமதியிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் விஏஓவை கையும் களவுமாகக் கைது செய்தனர்.