ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் - ஸ்ரீதர் வேம்பு உறுதி!
Jan 13, 2026, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Murugesan M by Murugesan M
Sep 30, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பங்குச்சந்தையில் இறங்கும் திட்டம் இல்லை என்று ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் அழுத்தம் நிறுவன நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

10 ஆண்டுகளுக்கு முன்னதாக, அமெரிக்காவில் அதிக சம்பளம் பெற்ற வந்த நல்ல வேலையை விட்டுவிட்டு, எந்த வெளிப்புற நிதியுதவியும் இல்லாமல் தமிழகத்தில் ஒரு கிராமத்தில், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் இலட்சியத்துடன் இந்தியா திரும்பிய ஸ்ரீதர் வேம்பு, ZOHO நிறுவனத்தை தொடங்கினார். மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் போட்டியிடக்கூடிய வணிக மென்பொருளைஉருவாக்கிச் சாதனை படைத்தார் ஸ்ரீதர் வேம்பு.

சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில், 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் 50 க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான மென்பொருள் தயாரிப்புகளை ZOHO நிறுவனம் உருவாக்காகியுள்ளது. மின்னஞ்சல் தொடங்கி வணிக மேலாண்மை வரை ZOHO-வின் மென்பொருட்கள் உலக அளவில் சிறந்த தயாரிப்புகளாகப் பாராட்டப்படுகின்றனன. ZOHO வின் சிறந்த தொழில்நுட்ப முயற்சிக்கு உதாரணமாக அரட்டை (Arattai) மெசஞ்சர் செயலியைச் சொல்லலாம். வாட்ஸ் அப் க்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரட்டை (Arattai) மெசஞ்சர் செயலி 8 kbps என்ற குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் நன்றாகச் செயல்பட அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே போல், GMAIL-க்கு போட்டியாக ZOHO மெயில் சேவையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, எப்போதும் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் மக்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் மின்னஞ்சல், வாட்ஸ் அப் என பரவி வரும் தொழில்நுட்ப சேவைகள் வரை இந்தியாவில் தயாரித்த பொருட்களை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 7 நாட்களில் ஜோஹோமெயில் 50 லட்சத்துக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ZOHOவின் அரட்டை பதிவுகள் ஒரு நாளைக்கு 3,000 இலிருந்து ஒரு நாளைக்கு 3.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆப் ஸ்டோர் தரவரிசையில் மூன்று நாட்களிலேயே முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது ZOHO. மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்கும் வகையிலும், அதே நேரத்தில் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாகக வகையிலும், பல முக்கிய அம்சங்களுடன் புதிய அரட்டை (Arattai) மெசஞ்சர் செயலி வரும் நவம்பரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ZOHO அரட்டை வழக்கமான அம்சங்களுடன் செய்தி அனுப்புதல், அழைப்புகள், குரல் குறிப்புகள், மீடியா பகிர்வு மற்றும் ஆண்ட்ராய்டு டிவிக்கான ஆதரவையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனையும் ZOHO அரட்டை வெளியிட்டுள்ளது. இதற்காக ZOHO நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அதன் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். ZOHO க்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து அந்நிறுவனம் பங்குசந்தையில் நுழைய வேண்டும் என்ற யோசனையைப் பல முன்னணி முதலீட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், ZOHO இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு வேறு விதமான கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது Zoho ஒரு பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருந்திருந்தால், Arattai என்ற செயலி தயாரிக்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு செயலியை உருவாக்குவதில் உள்ள நீண்ட தூர R&D, காலாண்டுக்கு காலாண்டு சந்தை அழுத்தங்களைத் தாங்க முடியாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று ZOHO ஒரு மென்பொருள் நிறுவனம் மட்டுமல்ல, தனக்கு தானே நிதியளிக்கும் ஒரு அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகமாகும் என்றும் கூறியுள்ளார். பொதுச் சந்தைக்கு வரும் போது,எப்போதுமே பங்குகளின் மதிப்பை உயர்த்துவதில் மட்டுமே கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களின் அழுத்தம் நிறுவன நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெளிவுபடுத்தியுள்ளார்.

பிற முதலீட்டாளர்கள் நிதியை நிராகரித்து, இந்திய கிராமப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை வெற்றிகரமாக கட்டமைக்க முடியும் என்பதை ஸ்ரீதர் வேம்பு நிரூபித்து வருகிறார் என்று பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.

Tags: ZOHO's chat app to have new features in November - Sridhar Vembu confirms
ShareTweetSendShare
Previous Post

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

Next Post

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies