திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொண்டு, தன்னார்வ அமைப்பு, புலியின் முகத்தை வடிவமைத்துள்ளது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் “சோலை குருவி” என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
அதன்படி அங்கு சேகரிக்கப்பட்ட பிளாஷ்டிக் பொருட்களை கொண்டு அவர்கள் புலி முகத்தை போன்று தத்ரூமாக அலங்கரித்தனர்.