இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7 ஆயிரத்து 616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அரசுப் பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்தக் காசோலையில் 7 ஆயிரத்து 616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது.
அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundreden sixteen என்பதற்கு பதிலாக Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.
Seven-க்கு பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday என்றும், hundred என்பதற்கு பதிலாக harendra என எழுதப்பட்டுள்ளது.
பள்ளி தாளாளர் ஒருவரே இப்படி எழுதினால், பள்ளிக் குழந்தைகள் நிலை என்ன? எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.