தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை, ஆயுதபூஜை பண்டிகை காரணமாக நேற்று முதலே உதகைக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகளின் தொடர் வருகையால் உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது.