மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்ந்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய அகவிலைப்படி, ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்றவர்கள் எனச் சுமார் 1 கோடியே 15 லட்சம் பேர் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.