மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரள மாநிலம் இடுக்கியில் கழிவுநீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மலக்குழிகளில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்பொழுது ஓயும் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தூய்மைப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் மேம்படுத்துவதிலும் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, கேரளாவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து கொடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.