சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் சாலையின் தடுப்புகள் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவர் ஆயுதபூஜை பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதியது. இதில் முனியாண்டி, கணபதி அம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















