சென்னை தாம்பரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தோண்டப்பட்டு மின் வயர் பதிக்கப்படுவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெருங்களத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாகத் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தத் தார் சாலை தற்போது தோண்டப்பட்டு மின் வயர் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீண்டிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.