கரூர் சம்பவம் - நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் - நீதிபதிகள்!
Mar 15, 2026, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2025, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற வேண்டாம் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்தனர்.

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும், தவெகவை தடை செய்யக் கோரியும், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகள் விதிப்பது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது, விஜய் தாமதமாக வந்ததே இத்தகைய பெருந்துயருக்கு காரணம் என்ற வாதம் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகள், அடிப்படை வசதிகளை செய்திருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்ததுடன், இது தொடர்பான மனுக்கள் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவற்றுடன் சேர்த்து இந்த மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, 3 மனுக்களையும் முடித்து வைத்தனர்.

பின்னர் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குக் கூடுதல் நிவாரணம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை விசாரித்தனர்.

அப்போது, ஒரே நாளில் உடற்கூராய்வு நடந்தது குறித்து மனுதாரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள் எனக் கடிந்த நீதிபதிகள், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தற்போது சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற வேண்டாம் எனவும்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: கரூர் சம்பவம்Karur incident - Don't turn the court into a political arena - High Court
ShareTweetSendShare
Previous Post

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

Next Post

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies