வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப் படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நட்ததின. வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் வீடியோவை சமூக வலைதளத்தில் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு கப்பல் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா நாட்டினர் போதைப்பொருள் கடத்துவதை நிறுத்தும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.