அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி சந்தோஷமாகத் தந்தையை வழியனுப்பி வைத்தாக மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் திருவுருவப்படத்தை அவரது மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, மருமகன் கார்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி சந்தோஷமாகத் தந்தையை வழியனுப்பி வைத்தாகக் கூறினார்.
தனது பெற்றோர் காதல் ஜோடியாக வாழ்ந்து குடும்பத்தை அன்பாக நடத்தி வந்ததாகவும், அவர்களைப் பார்த்துதான் தாமும் அன்பான முறையில் குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு எல்லாம் பதில் கூற முடியாது எனவும் இந்திரஜா கூறினார்.