தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 27- ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் தவிட்டுப்பாளையம் பகுதியில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘
அப்பொழுது விஜய் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அதன் மீது மோதுவது போல் அஜாக்கிரதையாக இருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கீழே விழுந்தனர். இதில் லேசான காயத்துடன் அவர்கள் உயிர் தப்பினர்.
இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்ற இருவர் என மொத்தம் மூன்று பேர் மீது அதிவேகத்தில் செல்வது மற்றும் கவனக் குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.