ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்டc விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 2 ஆவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இரவு திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து மளமளவெனத் தீ வேகமாகப் பரவியதால் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.
தகவல் அறிந்து அங்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்தத் தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் உயிரிழப்பிற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணமென மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.