மலைச்சரிவுகளில் வீசும் பனிப்புயல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் 1,000 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.
உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது.
இங்குக் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த மலையேற்ற வீரர்கள் ஆயிரம் பேர், மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.