மேற்குவங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிடச் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதலில் பாஜக எம்.பி கஜென் முர்மு படுகாயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை கொட்டித் தீர்த்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார்.
அப்போது அவர் மீது கற்களை வீசிச் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இந்ததாக்குதலைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாகப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.