நடப்பாண்டில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஒரு ஜப்பானியர் உட்பட மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு முதற்கட்டமாக மருத்துவத்துறைக்கு இன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்புச் சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.