சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மானின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது.
2 வாகனங்களில் வந்த 6 பேர் குழு கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளிவந்த ‘லோகா’ திரைப்படம் உலகம் முழுவதும் 300கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை எட்டிய நிலையில், வருமான மற்றும் நிதி பரிமாற்ற ஆவணங்கள் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் கேரளாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.