காஞ்சிபுரம் கந்தகோட்டம் முருகன் கோயிலில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
கந்தபுராணம் அரங்கேறிய கந்தகோட்ட முருகன் கோயிலில் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.