பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் : நஞ்சான இருமல் மருந்து -பகீர் பின்னணி!
Jan 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் : நஞ்சான இருமல் மருந்து -பகீர் பின்னணி!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோல்ட்ரீப் இருமல் மருந்து விஷமானதால் 15 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பயிற்சி பெறாத பணியாளர்களால், 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் மருந்து தயாரிப்பின்போது நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 15 குழந்தைகளின் உயிரைக் குடித்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மருத்துவப் பரிசோதனையில் குழந்​தைகளின் சிறுநீரகங்​களில் டை எத்திலீன் கிளை​கோல் என்ற நச்சு ரசாயனம் இருந்ததே இருமல் மருந்து விஷமாகக் காரணம் எனத் தெரியவந்தது. கோல்ட்ரிஃப் மருந்தில் நச்சுத் தன்மை கொண்ட டை எத்திலீன் கிளைகால் என்ற ரசாயனம் 48.6 சதவிகிதம் அளவில் இருந்ததும், இது பெயின்ட் மற்றும் மைப்போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படும் ஒரு வகை ரசாயனம் என்பதும் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஸ்ரீசென் நிறுவனத்தில் பேட்ச் 13-ல் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதோடு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடையும் விதிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 19 மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறை சோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறையும் கோல்ட்ரிஃப் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தியது.

அப்போது மருந்து தயாரிப்பில் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் நடத்திருப்பதும், சுகாதாரமற்ற முறையில் மருந்து தயாரிக்கப்பட்டதும் அம்பலமாகியிருக்கிறது. தொழிற்சாலையில் காற்றோட்டம் மோசமாக இருந்ததும், சேதமடைந்த, துருப்பிடித்த உபகரணங்கள் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

தொழிற்சாலையில் காற்று கையாளும் அலகுகள் அங்கு இல்லாமல் இருந்ததும் அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது. கேஸ் அடுப்புகளில் ரசாயனங்கள் நிறைந்த குடுவைகள் சூடாக்கப்பட்டது, ஓட்டை விழுந்த பிளாஸ்டிக் குழாய்களில் மருந்துகள் கசிந்தது, பயிற்சி பெறாத தொழிலாளர்கள் கையுறைகள், மாஸ்க் எதுவும் அணியாமல் பொருட்களை கலந்தது போன்ற கடுமையான விதிமீறல்கள் மருந்து தயாரிப்பில் நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

26 பக்கங்களைக் கொண்ட தமிழ்நாடு அரசு அறிக்கையில், ஆலை அமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவின் வடிவமைப்பு மாசுபடுத்தும் அபாயங்களுக்கு வழிவகுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருந்துகள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் தர உறுதித்துறை இல்லை, உற்பத்தியை மேற்பார்வையிட தகுதி வாய்ந்த வேதியியலாளர்கள் இல்லை என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயன கழிவுகளை நேரடியாகப் பொது வடிகாலில் வெளியேற்றியது எனப் பல விதிமீறல்கள் நடந்துள்ள நிலையில், விசாரணையின் அடுத்தடுத்த பக்கங்கள் பகீர் கிளப்பும் தகவல்களை சுமந்து நிற்கின்றன. மனித உயிர்களை காவு வாங்கும் இதுபோன்ற நிறுவனங்களை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Tags: Untrained staff350 violations - background on the poisonous cough medicineநஞ்சான இருமல் மருந்து
ShareTweetSendShare
Previous Post

‘கோ கலர்ஸ்’ கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Next Post

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies