பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் : நஞ்சான இருமல் மருந்து -பகீர் பின்னணி!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பயிற்சியற்ற பணியாளர்கள், 350 விதிமீறல்கள் : நஞ்சான இருமல் மருந்து -பகீர் பின்னணி!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோல்ட்ரீப் இருமல் மருந்து விஷமானதால் 15 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், பயிற்சி பெறாத பணியாளர்களால், 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் மருந்து தயாரிப்பின்போது நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 15 குழந்தைகளின் உயிரைக் குடித்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மருத்துவப் பரிசோதனையில் குழந்​தைகளின் சிறுநீரகங்​களில் டை எத்திலீன் கிளை​கோல் என்ற நச்சு ரசாயனம் இருந்ததே இருமல் மருந்து விஷமாகக் காரணம் எனத் தெரியவந்தது. கோல்ட்ரிஃப் மருந்தில் நச்சுத் தன்மை கொண்ட டை எத்திலீன் கிளைகால் என்ற ரசாயனம் 48.6 சதவிகிதம் அளவில் இருந்ததும், இது பெயின்ட் மற்றும் மைப்போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படும் ஒரு வகை ரசாயனம் என்பதும் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஸ்ரீசென் நிறுவனத்தில் பேட்ச் 13-ல் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் உட்பட 5 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டதோடு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடையும் விதிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 19 மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறை சோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத்துறையும் கோல்ட்ரிஃப் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தில் அதிரடியாகச் சோதனை நடத்தியது.

அப்போது மருந்து தயாரிப்பில் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் நடத்திருப்பதும், சுகாதாரமற்ற முறையில் மருந்து தயாரிக்கப்பட்டதும் அம்பலமாகியிருக்கிறது. தொழிற்சாலையில் காற்றோட்டம் மோசமாக இருந்ததும், சேதமடைந்த, துருப்பிடித்த உபகரணங்கள் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

தொழிற்சாலையில் காற்று கையாளும் அலகுகள் அங்கு இல்லாமல் இருந்ததும் அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தது. கேஸ் அடுப்புகளில் ரசாயனங்கள் நிறைந்த குடுவைகள் சூடாக்கப்பட்டது, ஓட்டை விழுந்த பிளாஸ்டிக் குழாய்களில் மருந்துகள் கசிந்தது, பயிற்சி பெறாத தொழிலாளர்கள் கையுறைகள், மாஸ்க் எதுவும் அணியாமல் பொருட்களை கலந்தது போன்ற கடுமையான விதிமீறல்கள் மருந்து தயாரிப்பில் நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

26 பக்கங்களைக் கொண்ட தமிழ்நாடு அரசு அறிக்கையில், ஆலை அமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவின் வடிவமைப்பு மாசுபடுத்தும் அபாயங்களுக்கு வழிவகுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருந்துகள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் தர உறுதித்துறை இல்லை, உற்பத்தியை மேற்பார்வையிட தகுதி வாய்ந்த வேதியியலாளர்கள் இல்லை என்பதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயன கழிவுகளை நேரடியாகப் பொது வடிகாலில் வெளியேற்றியது எனப் பல விதிமீறல்கள் நடந்துள்ள நிலையில், விசாரணையின் அடுத்தடுத்த பக்கங்கள் பகீர் கிளப்பும் தகவல்களை சுமந்து நிற்கின்றன. மனித உயிர்களை காவு வாங்கும் இதுபோன்ற நிறுவனங்களை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

Tags: Untrained staff350 violations - background on the poisonous cough medicineநஞ்சான இருமல் மருந்து
ShareTweetSendShare
Previous Post

‘கோ கலர்ஸ்’ கடைகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Next Post

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? – அண்ணாமலை கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies