டாடா குழுமத்தில் தலையெடுத்த கோஷ்டி மோதல் : உச்சத்தை தொட்ட அதிகார பசி!
Jan 14, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டாடா குழுமத்தில் தலையெடுத்த கோஷ்டி மோதல் : உச்சத்தை தொட்ட அதிகார பசி!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மக்கள் அனைவரின் நன்மதிப்பை பெற்ற டாடா குழுமத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் பேசுபொருளாகியுள்ளது. டாடா நிறுவனத்தின் வளர்ச்சியை அது பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்? பிரச்னைக்கு என்ன காரணம்?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

156 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வந்த ரத்தன் டாடா மறைந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. கடந்தாண்டு இதே மாதத்தில்தான் ரத்தன் டாடா உடல்நலக்குறைால் காலமானார். அவரது மறைவுக்கு பிறகு யார் டாடா குழுமத்தைத் திறம்பட வழிநடத்தி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ஓராண்டாகியும் அந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அதுமட்டுமின்றி, உச்சபட்ச அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக டாடா குழுமத்தில் தற்போது அதிகார போட்டியே வெடித்துள்ளது. இதனை சரிசெய்ய முதலில் நலம் விரும்பிகள் சிலர் முயன்றனர். பின்னர், தொழிலதிபர்கள் சமரசம் செய்து வைக்க முன்வந்தனர்.

தற்போது மத்திய அமைச்சர்களே தலையிடும் அளவுக்கு நிலைமை கைமீறியும் சென்றுள்ளது. தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை, டாடா அறக்கட்டளை கைவசம் வைத்துள்ளது.

அந்த அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடாவும், துணை தலைவராக வேணு ஸ்ரீனிவாசனும் உள்ளனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங், வழக்கறிஞர் டேரியஸ் கம்பாட்டா, சிட்டி இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரமித் ஜாவேரி, ஜெஹாங்கிர், மெஹ்லி மிஸ்திரி ஆகியோர் அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வருவதுதான் தற்போதைய பிரச்னைக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. ரத்தன் டாடா உயிருடன் இருந்தவரை டாடா அறக்கட்டளையிலும் சரி, டாடா சன்ஸ் குழுமத்திலும் சரி எந்தக் கோஷ்டி பூசலும் ஏற்படவில்லை.

ஆனால், நோயல் டாடா பொறுப்பு வந்த பின்னர் சிலர் அவரது தலைமைக்கு எதிராகக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த இரு தரப்பு மோதல் செப்டம்பர் 11ம் தேதி வெளிப்படையாக வெளிஉலகிற்கு தெரிய வந்தது. அன்றைய தினம் டாடா அறக்கட்டளையின் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அப்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கிற்கு மேலும் ஓராண்டிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என நோயல் டாடா தெரிவித்தார். ஆனால், அதனை மெஹ்லி மிஸ்திரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கீர், டேரியஸ் காம்பட்டா ஆகிய 4 பேரும் நிராகரித்து விட்டனர். மேலும், மெஹ்லி மிஸ்திரியை நியமன இயக்குநராக நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த இரு தரப்பு பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, நோயல் டாடா, வேணு ஸ்ரீனிவாசன், டேரியஸ் கம்பாட்டா ஆகியோரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனும் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

அமித்ஷா உடனும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனும் அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டாடா குழுமம் 4 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது.

எனவே, அந்த நிறுவனத்தில் நிலவும் இரு தரப்பு மோதல், மொத்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதித்துவிடக் கூடாது என மத்திய அமைச்சர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர்களே நேரடியாகத் தலையிட்டுள்ளதால், டாடா அறக்கட்டளையில் நிலவும் பிரச்னைக்கு விரைவில் சுமூக முறையில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tataFaction conflict erupts within the Tata Group: Hunger for power reaches its peakடாடா குழுமத்தில் தலையெடுத்த கோஷ்டி மோதல்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

Next Post

அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies