இன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு : ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வறிக்கை!
Jan 14, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு : ஆஸ்துமா நோயாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வறிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலர்களால் அதிகப்படியான காற்று மாசு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

அதிகரித்து வரும் மக்கள் தொகையும், அதிவேகமான நகர்மயமாதலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது, காற்று மாசுபாடு. எரிபொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதாலும், வாகன போக்குவரத்தாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களாலும், தொடர்ச்சியாகக் காடுகள் அழிக்கப்படுவதாலும் காற்று மாசடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், மனிதர்களுக்குப் பல்வேறு உடல்நலப்பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஆஸ்துமாவும், நுரையீரல் பாதிப்பும் அதிகளவில் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளால் கடந்தாண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளை தவிர்க்க, ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலர்களை பயன்படுத்தி வருகின்றனர். MDI எனப்படும் மீட்டர் டோஸ் இன்ஹேலர், SMI எனப்படும் சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர், DPI எனப்படும் உலர் பவுடர் இன்ஹேலர் என இவற்றில் பல வகைகள் உள்ளன. இந்த இன்ஹேலர்களால் பல லட்சம் மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த இன்ஹேலர்கள் தொடர்பாகக் கலிபோர்னியா பல்கலைகழகம் சார்பில், நுரையீரல் நிபுணர் வில்லியம் பெல்ட்மேன் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்டர் டோஸ் இன்ஹேலர்கள் மூலம் மருந்தை நுரையீரலுக்குள் செலுத்த ஹைட்ரோ புளோரோ அல்கேன் என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாயு சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்களால் வெளியான மாசுக்களில், 98 சதவீத மாசு MDI வகை இன்ஹேலர்களால் ஏற்பட்டதாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது. இவை சுமார் இரண்டரை கோடி மெட்ரின் டன் அளவுக்குக் கார்பனை உழிந்துள்ளதாகவும், இது 5 லட்சத்து 30 லட்சம் பெட்ரோல் கார்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MDI இன்ஹேலர்களுடன் ஒப்பிடுகையில், SMI, DPI வகை இன்ஹேலர்களில் ஹைட்ரோ புளோரோ அல்கேன் வாயுவின் பயன்பாடு இல்லாததால், அவற்றால் எந்த பாதிப்பு் இல்லை எனவும் ஆய்வாளகள் விளக்கம் அளித்துள்ளனர்.

காற்று மாசுபாடால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் பாதிப்பைச் சரிசெய்ய இன்ஹேலர் பயன்படுத்தப்படுகிறது. அந்த இன்ஹேலர்களால் மீண்டும் காற்று மாசு ஏற்படுகிறது. இதுதான் அந்த ஆய்வின் சாராம்சம். இதனை தவிர்க்கக் குறிப்பிட்ட வகை இன்ஹேலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: இன்ஹேலர்களால்ஆஸ்துமாAir pollution caused by inhalers: A study that shocked asthma patientsஇன்ஹேலர்களால் ஏற்படும் காற்றுமாசு
ShareTweetSendShare
Previous Post

அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Next Post

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Related News

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies