கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? - சிறப்பு தொகுப்பு!
Oct 12, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Oct 12, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி பகுதியில் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகள் தயாரிப்பு ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இந்த சேலைகளின் சிறப்புதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செட்டிநாடு சமையல், செட்டிநாடு பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை. இதேபோல் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு…

காரைக்குடி மற்றும் அதன் அருகே உள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் செட்டிநாடு காட்டன் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். ஆண்டு முழுவதும் கைத்தறி சேலைகள் தயாரிப்பில் இவர்கள் ஈடுபட்டு வந்தாலும் தீபாவளி பண்டிகையையொட்டி சேலைகள் உற்பத்தி மேலும் தீவிரமடைந்துள்ளது. கண்டாங்கி சேலைகள், சுங்குடி சேலைகள், பல்வேறு காலநிலைக்கு ஏற்றவாறு அணியும் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைத்தறி சேலைகள் கனஜோராக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் , செட்டிநாடு காட்டன் சேலைகள் தயாரிப்பு, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக வேலைக்குச் செல்லும் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் விரும்பி அணியும் சேலையாக செட்டிநாடு காட்டன் சேலைகள் திகழ்கின்றன.

300 கிராம் எடை முதல் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அன்னபச்சி ரகம், உத்ராட்சை ரகம், தாழம்பூ பூக்கரை ரகம், செட்டிநாடு ஸ்பெஷல் கோட்டையூரான் பார்டர் ரகம், செல்ப்முந்தி ரகம் உள்ளிட்ட பல டிசைன்களில் சேலைகள் தயாரித்து வருகின்றனர்.

700 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. திருமணத்தின் போது மணப்பெண் அணியக்கூடிய பட்டுச் சேலைகளும் தயார் செய்யப்படுகின்றன. மணப்பெண்ணின் புகைப்படத்தை கொடுத்தால் அந்த படம் சேலையில் வருமாறும் நெய்து தருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு இளம் பெண்கள் அணியக்கூடிய சுடிதார், சல்வார் வகைகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன.

இப்பகுதிக்கு சுற்றுலா வரும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர்களும் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். தமிழ் பெண்கள் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாட்டு பெண்களும் செட்டிநாடு கைத்தறி ரக சேலைகளின் தரம் பற்றி தெரிந்து கொண்டு ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கி அணிகின்றனர்.

என்றாலும் 3000 தறிகள் வரை இருந்த காரைக்குடி பகுதியில் தற்போது 50 தறிகள் என்ற அளவில்தான் செயல்படுகின்றன. அதிலும் வேறு தொழில் தெரியாத வயதான முதியவர்கள் தான் இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.

நலிவடைந்து வரும் தங்கள் கைத்தறி தொழில் மேலும் வளர மத்திய அரசு கருணையுடன் 5% சதவீதமாக உள்ள GST வரியை தள்ளுபடி செய்தால் போதும் என்கிறார்கள் அவர்கள். தமிழக அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்கள் வாரத்தில் இரு நாட்கள் கைத்தறி சேலை அணிந்து வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டால் நலிந்து வரும் நெசவுத் தொழிலை காப்பாற்றலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த கைத்தறி நெசவாளர்களின் உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தங்களது மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதும் நெசவாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tags: diwali 20252025 diwalidiwali puja 2025diwali song 2025DeepavalDiwali fuctiondeepavali special sareekaraikudi chettinad cotton sareeDiwalideepavali functionChettinad handloom
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies