இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!
Oct 15, 2025, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

Web Desk by Web Desk
Oct 15, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி மற்றும் கார்த்திகைத் தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலோ அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.

தீபாவளி பண்டிகையை வரும் திங்கள் கிழமைக் கொண்டாட பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி அன்றும் அதனைத் தொடர்ந்து வருகின்ற கார்த்திகைத் திருநாளின்போதும் வீடுகளை அகல்விளக்குகள் ஏற்றி அலங்கரிப்பது வழக்கம்.

ஆனால் அகல்விளக்குத் தயாரிப்புக்கு புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்திலோ அதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுங்கான்கடை, தாழக்குடி, கண்டன்விளை, புலியூர்குறிச்சி, அருமனை, காப்புக்காடு, புதுக்கடை உள்பட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழில் நடைபெற்று வருகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழில் படிப்படியாகத் தொய்வடைந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடைப் பகுதியில் மூன்று தலைமுறைகளாகப் பல குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பண்டிகைக் காலங்களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களைத் தயாரித்து அதை விற்பனைச் செய்து வருகின்றனர்.

இந்தத் தொழிலுக்கு தேவையான களிமண் குமரிமாவட்டத்தின் பல்வேறு குளங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் விலைக் கொடுத்து கொண்டு வரப்படுகிறது. இதைக் கொண்டு சமையல் செய்யத் தேவையான அடுப்பு, சட்டி, பானை, சிலைகள், அகல் விளக்குகள், பொங்கல் பானை, நவராத்திரி ஸ்பெஷல் கொலு பொம்மைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை, அதைத் தொடர்ந்து வரும் கார்த்திகைத் தீபத் திருவிழாவிற்க்காக மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடுவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. அகல்விளக்குகளுக்குப் போதிய விலைக் கிடைப்பதில்லை, புதிய அகல்விளக்குகளை வாங்க மக்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் வேதனையாக இருக்கிறது.

கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் கார்த்திகைத் திருவிழாவின்போது அனைத்து மாவட்ட வியாபாரிகளும் இங்கு முகாமிட்டு, அகல் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். இப்படிப் பெரிய தொழிற்சாலைகளுடன் போட்டி போடும் அளவிற்குத் தங்களுக்கு வசதி இல்லை என்றும் வேதனையுடன் சொல்கின்றனர்.

தற்போது அடுக்கு விளக்குகளை மட்டுமே தயார் செய்து வருவதாகவும் அகல் விளக்குகள் செய்வதில் ஆர்வம் இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள். போதிய வருமானம் இல்லாததால் வேறு தொழில்களுக்கு செல்லும் நிலையில் இருப்பதாகவும் குமுறுகின்றனர்.

ஒளிவீசும் திருநாட்களாக தீபாவளியும் கார்த்திகைத் திருநாளும் கருதப்படுகின்றன. ஆனால் அந்தப் பண்டிகைகளுக்கான அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளர்களோ எதிர்காலம் இருண்டு விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதோடு தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags: DiwaliKarthikai Deepatri FestivalDark future: Akalvilaku pottery workers in fear
ShareTweetSendShare
Previous Post

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Next Post

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies