தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சர்வதேச எல்லையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.