அமேசான் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் 15 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணிநீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனிதர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் செலவு குறையும், வேலையும் துரிதமாகும் என்பதால் பல்வேறு நிறுவனங்களும் அதற்கு மாறுகின்றன.
இந்த நிலையில் தான், அமேசான் நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 100 பில்லியன் டாலரை அமேசான் முதலீடு செய்துள்ளது.
சமீபத்தில் தான், அமேசானில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
















